Sunday, August 28, 2016

வந்தவர்-மொழியா-செந்தமிழ்ச்-செல்வமா

http://www.unmaionline.com/3379-வந்தவர்-மொழியா-செந்தமிழ்ச்-செல்வமா.html

Saturday, August 27, 2016

தமிழில் பேசுவோம், எழுதுவோம் !

வாரம் அய்ந்து சொற்கள்- 3

வருஷம்-  ஆண்டு
பயம்-  அச்சம்
கஷ்டம்-  கடினம்
சமாச்சாரம்-  செய்தி, தகவல்
மனசு-  மனது


வாரம் அய்ந்து சொற்கள் :- 2

விஷயம்-  செய்தி, தகவல்,கருத்து
ஆலோசிப்போம்-   சிந்திப்போம், பார்க்கலாம்
work-   வேலை,அலுவல்
office- அலுவலகம், வேலையில்
சிரமம்-  கடினம்
ரொம்ப-  மிகுதி, மிகுந்த
 

தமிழில் பேசுவோம், எழுதுவோம் !

எப்போதும் பயன் படுத்தக் கூடாத வார்த்தைகள்

பண்ணு, பண்ணிட்டேன், 

வாரம் 5 வார்த்தைகள் என்று நம்மை நாமே மாற்றிக் கொள்வோம்.

சந்தோஷம்  -  மகிழ்ச்சி

call-  அழை, கூப்பிடு

Hello- வணக்கம்
Bye- வாழ்த்துகள்
telephone, phone -தொலைபேசி
email- மின்னஞ்சல்
internet-இணையம்
 சவுக்கியமா-   நலமா? 

பெரியாரும் தமிழும் !

 தமிழ் இலக்கியங்களை மூட நம்பிக்கைகளுக்காகக் கடுமையாகச் சாடியுள்ளார். திருக்குறள் ஓரளவிற்குப் பரவாயில்லை, கடவுள் என்ற வார்த்தையில்லை. பல மூட நம்பிக்கைகளைச் சாடுகின்றார் ஆனால் பெண்ணடிமை நிறைய இருக்கின்றது என்று கூறியுள்ளார். "தீக்குறளை" ஓதாதே என்பதற்குக் காஞ்சி  சங்கரன் ( மிகவும் போற்றப்பட்ட மகாப் பெரியவாள்) திருக்குறளைப் படிக்காதே என்று சொன்னார். அப்போது பெரியார் வன்மையாகக் கண்டித்து திருக்குறளைப் பரப்பினார். பல மாற்றங்களைச் செய்து கொண்டார், ஒவ்வொன்றிற்கும் ஏன் என்பதை விளக்கமாக எழுதியுள்ளார். 


அவர் போட்ட போட்டால் தான் ஆத்திகராக இருந்த கனகசுப்புரத்தினம் ( புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ) தொடங்கிப் பல தமிழ்க் கவிஞர்களும், பல புரட்சி எழுத்தாளர்களும், கலைஞர்களும் உருவானர்கள். அவரால், அவரது இயக்கத்தால் தமிழ் வளர்ந்ததா, தமிழ் இலக்கியம், கலை வளர்ந்த்தா அவர்களைப் பெரியார் பாராட்டி ஊக்குவித்தாரா இல்லையா என்பது வெள்ளிடை மலை ! திரு.வி.க, மறைமலை அடிகளார் போன்றோர் அவரது தமிழ்த் தொண்டு பற்றி எழுதியும் பேசியும் இருப்பது காண்க !

பெரியார் மணியம்மை திருமணம்

பெரியார் பற்றி புரிதல் இல்லாமல் பேசும் பலருக்கு இந்த பதிவு
------------------------------------------------------------------------------
தந்தை பெரியார் அவர்கள் 72 வயதில் 31 வயதான மணியம்மை அவர்களை பெண்பார்த்து வரதட்சினை, வண்டியெல்லாம் வாங்கி குடும்ப வாழ்க்கைக்காகவோ, வாரிசு வேண்டும் எனவோ திருமணம் செய்து கொள்ளவில்லை.. முதல் மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்து போனபோது சொன்னார்கள் எனக்கிருந்த பாரம் குறைந்து விட்டது.. இனி இந்த மக்களுக்காக உழைக்க எனக்கு முழு நேரம் கிடைத்துவிட்டது என்று..
பெரியாருக்கு 72 வயது ஆகும் போது தன்னுடைய கோடிக்கணக்கான பரம்பரை சொத்தை பொது மக்களுக்காக எழுதி வைத்த போது, சட்டத்தில் இடமில்லை...நீங்கள் வாரிசாக நியமித்தால் அவர்கள் வேண்டுமானால் பொதுச்சொத்தாக்கமுடியும் என்ற நிலை....உடனே பெரியார் மணியம்மையை தத்தெடுக்க முற்படுகிறார்...அதற்கும் சட்டத்தில் இடமில்லை..ஏனெனில் வயது வந்த பெண்ணை சுவீகரிக்கமுடியாது அதாவது தத்தெடுக்கமுடியாது என்பது சட்டம்..
ஏற்காட்டில் இதைப்பற்றி கலந்தாலோசிக்க ஒரு வீட்டை விலைக்கு வாங்கி 20 வழக்கறிஞர்களுடன் தினமும் வாதாடியதைப் பார்த்த மணியம்மையார்.. மக்களுக்கு இந்த சொத்து போகவேண்டும் என்று நீங்கள் கருதினால் அதற்காக என்னை ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது? என்றவுடன் அதிர்ந்து போன பெரியார், என்னம்மா சொல்கிறீர்கள் என்றார்..
நான் உங்களுக்கு சமைத்துப் போடுகிறேன், துணி துவைக்கிறேன்.. இதை என் வாழ்நாள் முழுவதும் செய்யபோகிறேன். இந்த வெங்காய சட்டதிற்காக நீங்கள் ஏன் யோசனை செய்யணும் என்ற பிறகு அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த, அய்யாவின் மிக நெருங்கிய நண்பர் ராஜாஜி அவர்களை நேரில் சந்தித்து சொன்னபோது, ராஜாஜி அவர்கள்,, . உங்களுக்கு 72 வயதான பிறகு இப்போது திருமணம் செய்தால், மக்கள் உங்களைப்பற்றி அவதூறாகப் பேசுவார்கள் என்றார்.
அப்போது அறிவு ஆசான் தந்தை பெரியார் எனக்கு மக்கள் பேசுவதைப்பற்றிக் கவலையில்லை.. அவர்களின் நலம்தான் முக்கியம் என்று சொல்லி,,, .நடந்த திருமணம்.. அடிமையை விலைக்கு வாங்கும் திருமணமல்ல.. இன்றும், அனேக ஏழைப்பெண் குழந்தைகளை, அனாதை பெண்பிள்ளைகளை படிக்க வைக்க அவருடைய அந்த தியாகம் பயனாக இருக்கிறது.ராஜகோபாலாச்சாரியின் பேச்சைக்கேடுடு நடந்த திருமணம் என்று வேறு கொச்சைப்படுத்தினர் ...
--நன்றி வெற்றிவேந்தன்...