Saturday, August 27, 2016

பெரியாரும் தமிழும் !

 தமிழ் இலக்கியங்களை மூட நம்பிக்கைகளுக்காகக் கடுமையாகச் சாடியுள்ளார். திருக்குறள் ஓரளவிற்குப் பரவாயில்லை, கடவுள் என்ற வார்த்தையில்லை. பல மூட நம்பிக்கைகளைச் சாடுகின்றார் ஆனால் பெண்ணடிமை நிறைய இருக்கின்றது என்று கூறியுள்ளார். "தீக்குறளை" ஓதாதே என்பதற்குக் காஞ்சி  சங்கரன் ( மிகவும் போற்றப்பட்ட மகாப் பெரியவாள்) திருக்குறளைப் படிக்காதே என்று சொன்னார். அப்போது பெரியார் வன்மையாகக் கண்டித்து திருக்குறளைப் பரப்பினார். பல மாற்றங்களைச் செய்து கொண்டார், ஒவ்வொன்றிற்கும் ஏன் என்பதை விளக்கமாக எழுதியுள்ளார். 


அவர் போட்ட போட்டால் தான் ஆத்திகராக இருந்த கனகசுப்புரத்தினம் ( புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் ) தொடங்கிப் பல தமிழ்க் கவிஞர்களும், பல புரட்சி எழுத்தாளர்களும், கலைஞர்களும் உருவானர்கள். அவரால், அவரது இயக்கத்தால் தமிழ் வளர்ந்ததா, தமிழ் இலக்கியம், கலை வளர்ந்த்தா அவர்களைப் பெரியார் பாராட்டி ஊக்குவித்தாரா இல்லையா என்பது வெள்ளிடை மலை ! திரு.வி.க, மறைமலை அடிகளார் போன்றோர் அவரது தமிழ்த் தொண்டு பற்றி எழுதியும் பேசியும் இருப்பது காண்க !

No comments:

Post a Comment